April 2, 2012

திருவாசகம் பாடல் - 144


பழிப்புஇல் நின் பாதம் பழம்தொழும்பு
எய்தி விழப் பழித்து
விழித்து இருந்தேனை விடுதி கண்டாய்!
வெண் மணிப் பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி
நுந்தும் பந்தப் பெருமை 
தழிச்சிறை நீரில் பிறைக்கலம்
சேர்தரு தாரவனே!





பொருள்: சிவபெருமானே! முத்து, சங்கு, மந்தாரமலர் ஆகியவற்றை அடித்துக் கொண்டு, கங்கை நதி  வருகின்றது. அக்கங்கை நீரைத் தேக்கி வைக்கும் அணைபோல, உன் 
ஜடாமுடி இருக்கின்றது. அந்த அணையில் மிதக்கும் படகு போல இளம்பிறை விளங்குகின்றது. வெற்றி மாலையை அணிந்தவரே! குற்றமற்ற உன் திருவடிகளை வழி
வழியாக பின்பற்றும் முறைப்படி பணிந்து போற்றினேன். பாதியில் அப்படியே மறந்துவிட்டு பழித்துரைக்கத் தொடங்கி, விழித்துக் கொண்டு நிற்கின்றேன். அப்படிப்பட்ட அற்பன் தான் நான்! இருப்பினும், என்னை அப்படியே விட்டுவிட்டாயே!

No comments: