February 5, 2012

வழக்குகளில் வெற்றிபெறவும்,,வியாபாரத்தில் நல்ல வருவாய் வரவும் ஓத வேண்டிய பதிகம்,,,,


திருவீழிமிழலை 
பண்-குறிஞ்சி 

                                    திருச்சிற்றம்பலம் 

வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே 

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் 
கறைகொள் காசினை முறைமை நல்குமே 

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் 
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே 

நீறுபூசினீர் ஏறதேறினீர் 
கூறுமிழலையீர் பேறும் அருளுமே 

காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே 

பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே 

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே 

அயனு மாலுமாய் முயலு முடியினீர் 
இயலு மிழலையீர் பயனும் அருளுமே 

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே

காழி மாநகர் வாழி சம்பந்தன் 
வீலிமிழலைமேல் தாழும் மொழிகளே 

                                     திருச்சிற்றம்பலம்

     

No comments: