February 7, 2012

பிறவிப் பயனைக் கொடுக்கும் பதிகம்


திருச்சிற்றம்பலம்

பண்--சாதாரி

தலையே நீ வணங்காய் -தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ-கடல் நஞ்சுண்ட கண்டன் தண்னை
எண்தோள் வீசிநின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ-சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ 

மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை 
வாக்கே நோக்கிய மங்கை மணாளணை மூக்கே நீ முரலாய்

வாயே வாழ்த்து கண்டாய்-மதயானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்


நெஞ்சே நீ நினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்

கைகாள் கூப்பித்தொழீர்-கடிமாமலர் தூவி நின்று 
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென்-அரன் கோயில் வலம் வந்து 
பூக்கை யால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையாற்பயனென்

கால்களாற்பயனென் -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்களாற்பயனென் 

உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போகும்பொழுது 
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்குற்றார் ஆருளரோ

இறுமாந்திருப்பன் கொலோ -ஈசன் பல்கணத்தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ,

தேடிக் கண்டு கொண்டேன் -திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக்கண்டுகொண்டேன்..

திருச்சிற்றம்பலம்





  

No comments: