February 4, 2012

இடர்களையும் பதிகம்

இப்பதிகத்தை ஓதுவதால் இறையருள் கைகூடும் ,,,,,
இறையருள் ஒன்றிருந்தால் நம் அனைவர் இல்லங்களிலும் அமைதியும் ,,மங்களமும் உண்டாகும்,,,,






                                                  திருச்சிற்றம்பலம் 
திருநெடுங்களம் 
பண்--பழந்தக்கராகம் 

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும் 
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால் 
குறையுடையார் குற்றம் ஓராய்  கொள்கையினால் உயர்ந்த 
நிறையுடையார் இடர் களையாய்  நெடுங்கள மேயவனே,,,,

கனைத்தெழுந்த வெண்டிரை சூழ் கடலிடை நஞ்சு தன்னை 
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை 
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே ,,,,

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத 
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடட் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய் 
அழல் புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை யாரூரா 
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கித் 
தங்கி நில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல்கீழ் 
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும் 
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பெருமான் அணிந்த 
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை 
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய் மொழியால் ஏத்தி யிராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,,

வேழ வெண் கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும் 
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதி உளாகி    நின்றாய்
கேழல் வெண் கொம்பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே,,,

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கி நின்ற வேடமில்லாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார் 
துஞ்சலில்லா வாய் மொழியால் தோத்திர நின்னடியே 
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே,,,

நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மருகிட் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே,,,

                                        திருச்சிற்றம்பலம்








      
  



  

1 comment:

அருண் இராமசாமி said...

இதற்கு பொழிப்புரை இருந்தால் நன்றாக இருக்கும் ..